Showing posts with label பாசிக்குடா கடற்பரப்பில் நீராவி கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு. Show all posts
Showing posts with label பாசிக்குடா கடற்பரப்பில் நீராவி கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு. Show all posts

Monday, September 29, 2014

பாசிக்குடா கடற்பரப்பில் நீராவி கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு

பாசிகுடா கடற்பரப்பில் மூழ்கியிருந்த நீராவி கப்பல் ஒன்றின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காலி சமுத்திர தொல்பொருள் பிரிவு தெரிவித்துள்ளது.
கிழக்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற ஆராய்ச்சிகளின்போது இந்த சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்பொருள் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்னரும் பாசிகுடா கடற்பரப்பிலிருந்து மூன்று கப்பல்களின் சிதைவுகள் மீட்கப்பட்டிருந்தன.
இந்த அனைத்து கப்பல்களும் 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என அனுமானிக்கப்படுவதாக தொல்பொருள் நிபுணர் ரசிக்க முத்துகுமாரன தெரிவித்துள்ளார்.
கப்பல்களின் அநேகமான பாகங்கள் உடைந்துள்ளதால் அவை எந்த காலப் பகுதியைச் சேர்ந்தவை என்பதை உறுதிப்படுத்த முடியாமற்போயுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்